குற்றவாளிகள் தாக்கினால் துப்பாக்கியால் சுடலாம் – டிஜிபி

கொலைகளை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி. நெல்லை மாவட்டத்தில் காவல் அதிகாரிகளை தாக்கும் சம்பவங்கள் தடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிஜிபி, நெல்லை மாவட்டத்தில் காவல் அதிகாரிகளை தாக்கினால் துப்பாக்கியால் சுட தயங்கக்கூடாது என்றும் நெல்லை மாவட்டத்தில் பழிக்கு பழியாக நடத்தப்படும் கொலைகளை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார். நிலையில் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.  மேலும், … Read more

#BREAKING: பரபரப்பு.. இலங்கையில் துப்பாக்கி சூடு – 3 பேர் காயம்

இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் காயம். இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ள நிலையில், ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்திருந்தார். … Read more

#BREAKING: காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு – பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு!! ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் விமான நிலையத்தில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கி சூட்டில் அமெரிக்க பாதுகாப்பு படையினர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தலிபான் அமைப்பினர் கைப்பற்றிய நிலையில், காபூல் விமான நிலையத்தில் ஏராளமானோர் மக்கள் குவிந்ததால், கூட்டத்தை கலைக்க துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை … Read more

மெக்ஸிகோ எல்லையில் துப்பாக்கி தாக்குதல் – 15 பேர் உயிரிழப்பு!

மெக்ஸிகோ எல்லையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மெக்சிகோவின் எல்லை நகரமாகிய ரெய்னோசாவில் பகுதியில் நேற்று பல வாகனங்களில் வந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் திடீரென தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதுகாப்பு படை குழு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், டெக்ஸாஸ் நகரின் கிழக்குப் பகுதியில் துப்பாக்கி ஏந்திய பலர் திடீரென தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. … Read more

குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக சென்ற போலீசார் மீது துப்பாக்கிச் சூடு – 2 போலீசார் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து போடும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக சென்ற போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 2 போலீசார் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் தற்பொழுது வரை போலியோ பாதிப்பு காணப்படுவதால் இந்த ஆண்டுக்குள் போலியோவை ஒழிக்கும் விதமாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்துவதற்கு எதிர்ப்புகளும் எழும்பி வருகிறதாம். … Read more

திருமணத்தை கொண்டாட துப்பாக்கி சூடு நடத்திய மணப்பெண் மீது எப்.ஐ.ஆர் பதிவு!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பெண்மணி ஒருவர் தனது திருமண நாளன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் மீது எப்ஐஆர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்களுடைய திருமண நாள் அன்று பலர் தங்களது திருமணத்தை வித்தியாசமான முறையில் கொண்டாட வேண்டும் என்பதற்காக விமானங்களில் திருமணம் நடத்துவது, கடலுக்கு நடுவில் திருமணம் நடத்துவது என பல முறைகளில் தங்கள் திருமணத்தை விசேஷப்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். அதுபோல உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பெண்மணி ஒருவர் திருமண நாளன்று துப்பாக்கி சத்தத்தை … Read more

ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி சூடு – 5 அரசு ஊழியர்கள் மற்றும் 4 போலீசார் கொலை!

ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய 4 தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 அரசு ஊழியர்கள் மற்றும் 4 போலீசார் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் துப்பாக்கி ஏந்திய சிலர் திடீரென்று நடத்திய துப்பாக்கி சூட்டில் கிராமப்புற பாதுகாப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 4 போலீசார் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து அரசு ஊழியர்களும் இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென நடைபெற்ற இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷராப் கானி … Read more

இந்திய – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.!

பஞ்சாப் மாநிலத்தில் இந்திய – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் 2 தீவிரவாதிகள் எல்லைப்பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பஞ்சாப் மாநிலம் அத்தாரி எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இதற்கு தேடுதல் பணியில் ஈடுபட்ட வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொள்ளப்பட்டது என்று உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊடுருவ முயன்ற … Read more

பழனி துப்பாக்கி சூடு! காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பலி!

பழனி துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியம் உயிரிழப்பு. திண்டுக்கல் மாவட்டம், பழனி நரிக்கல்பட்டி சேர்ந்தவர் இளங்கோ.  இவருக்கு அப்பர் தெருவில் 12  செண்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, பழனியில் தியேட்டர் நடத்திவரும் நடராஜன் என்பவர், தனக்கு சொந்தமான இடம் என கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, இளங்கோவின் உறவினர்களான பழனிசாமி, சுப்பிரமணி ஆகியோரும் நடராஜனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.  இந்த தகராறில் நடராஜன் துப்பாக்கியால் … Read more

தமிழகத்தில் தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம்! இது தமிழகமா? வடமாநிலமா? – மு.க.ஸ்டாலின்

கடந்த ஒரு வாரத்தில் மட்டும், திண்டுக்கல், சென்னை மற்றும் திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், திண்டுக்கல், சென்னை மற்றும் திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.அடுத்தடுத்து நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவம் மக்கள்  மத்தியில்,அச்சத்திற் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இதற்க்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ஒரே வாரத்தில் மூன்று துப்பாக்கி சூடு சம்பவங்கள். … Read more