தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகள் வைக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையும் வைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று தமிழகத்தில் முறையாக அனுமதியின்றி சிலைகளை வைக்க அதிகாரிகளும் அனுமதிக்கக்கூடாது என்றும் அனுமதியின்றி சிலைகள் வைக்கப்பட்டால் உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறும் வரை சிலையை திறப்பதோ, மரியாதை செய்வதோ கூடாது என விருதுநகரில் இம்மானுவேல் சேகரனின் சிலையை அகற்றுவது தொடர்பான தனி நீதிபதி உத்தரவை […]