உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம் நடவுபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான விசாக்களையும் மத்திய அரசு உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது. இதன்படி, இனி எந்த பாகிஸ்தானிய குடிமகனும் இந்தியாவுக்குள் நுழைய முடியாது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கான விசா வரும் 27ம் தேதி முதல் செல்லாது. மேலும், மருத்துவ காரணங்களுக்காக பெறப்பட்ட விசா […]