யானை மீது தீ வைத்த கொடூரன்., மனதை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி.!

யானை மீது டயரில் தீக்கொளுத்தி வீசிய இரண்டு பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் மசினகுடியில் மூன்று மாத காலமாக முதுகில் காயத்துடன் சுற்றித்திரிந்து ஜனவரி 19-ல் உயிரிழந்த யானையின் மீது தீ கொளுத்தப்பட்ட டயரை வீசும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியிடுபட்டுள்ளது. இந்த வீடியோ காட்சியை பார்க்கும் போது பலருக்கும் மிகுந்த வேதனையை தருகிறது. இதனையடுத்து, இந்த கொடூர செயலை செய்த, நீலகிரி மாவநல்லா பகுதியை சேர்ந்த 2 பேரை கைது … Read more

யானையை சுட்டு கொன்ற வழக்கு- இரண்டு பேரிடம் விசாரணை நடத்தும் காவல்துறையினர்

மேட்டுப்பாளையம் பெண் யானை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கை. மேட்டுப்பாளையம் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலத்தில் இன்று காலை 25 வயது பெண் யானை ஒன்று காதில் ரத்தம் வழிந்த நிலையில் விளைநிலத்தில் இறந்துகிடந்தது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது . இந்த சம்பவ அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில்  யானையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் யானை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக  தெரியவந்துள்ளது, மேலும் யானையின் காதுக்கு மேல் புறத்தில் … Read more

#BREAKING: கேரளாவில் யானை கொலை – ஒருவர் கைது.!

அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து யானையை கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கேரளா வனத்துறை அறிவித்துள்ளது. கேரளா மாநிலம், பாலக்காட்டின் மலப்புரம் சைலண்ட் பள்ளாத்தாக்கில் கடந்த 27 ஆம் தேதி காட்டு யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தது. அந்த யானைக்கு அங்குள்ள சிலர், அன்னாசிபழத்தில் வெடிமருந்தை வைத்து உணவாக அளித்துள்ளனர். அதனை உண்ட யானையில் வாயில் வெடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலநாள் அந்த யானை உணவருந்தாமல் இருந்தது. திடீரென … Read more

“பிறந்த உடனே இறந்த குட்டி”கண்ணீர் விட்ட தாய் யானை…!!!

தன் ஈன்ற குட்டி யானை கண்முன்னே இறந்ததை கண்டு கண்ணீர் வடித்த தாய் யானை பார்ப்பவரை கலங்க வைத்துள்ளது. கொத்தனஹள்ளி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதிக்குள் இருந்து வன விலங்குகள், அவ்வப்போது ஊருக்குள் புகுவது வாடிக்கையாகும். இந்நிலையில் நேற்று பொன்னப்பா என்ற விவசாயியின் தோட்டத்திற்குள் புகுந்த பெண் யானைக்கு பிரசவ வலி ஏற்பட்டு குட்டி ஒன்றை ஈன்றது. ஆனால் பிறந்த சில நிமிடத்திலேயே அந்த குட்டி யானை உயிரிழந்தது. இதனால் தாய் யானை அங்கிருந்து செல்லாமல், இறந்து கிடந்த … Read more