மாநிலங்களவை தேர்தல்.! சட்டசபை செயலாளர் தேர்தல் அதிகாரியாக நியமனம்..!

தமிழ்நாட்டில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதால் அடுத்தமாதம் 26-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலுக்காக தமிழ்நாடு சட்டசபை செயலாளர் (கி.சீனிவாசன்) தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும் மொத்தமாக 17 மாநிலங்களை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 55 மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்த இடங்களை … Read more

அனுமதி பெற்றுத்தான் ஜெராக்ஸ் மிஷின் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

மக்களவை தேர்தலுக்கான இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களின் முடிவுகளும் வெளியாக உள்ளது. திருப்பரங்குன்றம் வாக்குப்பதிவு எண்ணும் மையத்திற்கு ஜெராக்ஸ் மிஷின் கொண்டுசெல்லப்பட்டது. இதுகுறித்து பேட்டியளித்த தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான நடராஜன், ‘உரிய அனுமதி பெற்றுதான் திருப்பரங்குன்றம் வாக்கு எண்ணும் மையத்திற்கு ஜெராக்ஸ் மிஷின் கொண்டு செல்லப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்திற்கு தேவையான இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கமானதே.’ என குறிப்பிட்டார். DINASUVADU