சென்னையில் உள்ள திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடையில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது கட்டுப்படுத்த முடியாத அளவில் பெருகி வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 2.5 லட்சத்திற்கும் மேல் உள்ளவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே,இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில்,சென்னை அண்ணா சாலையில் உள்ள திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடையில் பணிபுரியும் 4 […]