சிம்லா : ஹிமாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளில் மேக வெடிப்பு ஏற்பட்டு அதிகனமழை பெய்ததில் 5 பேர் பலியாகியுள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் அதி தீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையமும் ரெட் அலர்ட் விடுத்துள்ளதால் நிலமை அங்கு மோசமடைந்துள்ளது. சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், மீட்பு பணிகள் சவாலானதாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவு காரணமாக மணாலி-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் சேதமடைந்துள்து. மண்டியின் ராம்பன் […]