இடிதாக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்…! முதலமைச்சர் அறிவிப்பு ..!
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று வைத்தூர் சுற்றுவட்டரத்தில் உள்ள விவசாயிகள் 20 பேர் தண்ணீர்பந்தல் பட்டி பகுதியில் வேர்க்கடலை பிடுங்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மழையில் நனையாமல் இருப்பதற்காக கூடாரம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியில் திடீரென இடி விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கலைச்செல்வி , லட்சுமி அம்மாள் , சாந்தி ஆகிய மூன்று பெண்கள் இறந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். … Read more