பாரிஸ் ஒலிம்பிக் : இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கல பதக்கம் ..! அசத்திய ஸ்வப்னில் குசலே ..!

Swapnil Kusale Won 3rd Bronze Medal For India

பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் 33-வது ஒலிம்பிக் போட்டியானது நடைபெற்று வருகிறது. இதில் 196 நாடுகளைச் சேர்ந்த 10,672 வீரர், வீராங்கனைகள் 32 வித்தியாசமான விளையாட்டுகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

மேலும், பிரான்ஸ் முழுவதும் 35 மையங்களில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்றைய 6-வது நாளில் 50மீ. ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் இறுதி சுற்றில் இந்திய அணி சார்பாக ஸ்வப்னில் குசலே கலந்து கொண்டார்.

இதில் சிறப்பாக விளையாடிய அவர் இந்தியவிற்காக வெண்கல பதக்கத்தை வென்று உள்ளார். இந்த பதக்கத்தின் மூலம் இந்திய அணி நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. இந்த மூன்று வெண்கல பதக்கமும் துப்பாக்கி சுடுதல் பிரிவில் போட்டியில் இருந்து மட்டுமே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஸ்வப்னில் குசேல் 451. 4 புள்ளிகள் பெற்று 3-ம் இடம் பிடித்தார். சீன வீரரான ஒய்.கே. லூ 463.6 புள்ளிகள் பெற்று தங்கம் பதக்கத்தை வென்றார். அவரை தொடர்ந்து உக்ரைன் வீரரான குலீஷ் 461 புள்ளிகளை பெற்று வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்