#WPL : 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி ..!

பெண்களுக்கான WPL 2024 தொடரின் 3-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும் நேற்று மோதியது. இதில் டாஸ் வென்று மும்பை பெண்கள் அணி பந்து வீச முடிவு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி, மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. குஜராத் அணியில் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால், அந்த அணி ரன்களை எடுக்க மிகவும் சிரமித்திற்குள்ளானது. இறுதியில் குஜராத் அணி 20 ஓவருக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 127 என்ற எளிய இலக்கை அடைய பேட்டிங் செய்ய களமிறங்கியது மும்பை அணி.

Read More :- ரஞ்சிக் கோப்பை: காலிறுதியில் தமிழ்நாடு அணி வெற்றி: 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேற்றம்

தொடக்கத்தில் விளையாடிய மும்பை அணியின் வீரர்கள் ரன்களை எடுக்க தவறி அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இதனால் 49-3 என்ற கணக்கில் மும்பை அணி தடுமாறியது. ஆனால், அதன் பிறகு மும்பை அணியின் கேப்டன் ஆன ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் அமெலியா கெர் இருவரும் 4-வது விக்கெட்டுக்கு கூட்டணி அமைத்து நிதானத்துடன் விளையாடினார்கள்.

இதனால் மும்பை அணி சரிவிலிருந்து மீண்டு 18.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 129 என்ற இலக்கை அடைந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை அணி WPL 2024 தொடரின் 2-வது வெற்றியை பெற்றது. WPL-ல் தொடரில் ஒட்டுமொத்தமாக மூன்று முறை இவ்விரு அணிகளும் மோதியதில் மூன்று முறையும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்ட நாயகன் (M.O.M) – அமெலியா கெர் (மும்பை இந்தியன்ஸ்).

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்