கொரோனாவில் இருந்து குணமடைந்தார் விருத்திமான் சஹா..!

Indian cricketer Saha Corona has returned home after recovering from an infection

இந்திய கிரிக்கெட் வீரர் விருத்திமான் சஹா கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விருத்திமான் சஹாவுக்கு கடந்த மே 4 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார். இவர் தற்போது கொரோனாவில் இருந்து குணமடைந்து கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக அவருக்கு சஹாவுக்கு நெருக்கமானவர்கள் ஊடகங்களுக்கு தகவலை தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விருத்திமான் சஹா விளையாடி வந்தார். அப்போது விருத்திமான் சஹா உட்பட சில வீரர்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டதால் தேதி குறிப்பிடாமல் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், விருத்திமான் சஹா பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் வருகின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்றென்றால் இந்திய அணியின் விளையாடும் வீரர்கள் பட்டியலில் சாஹாவும் தேர்வாகி உள்ளார்