இவ்வளவு வெப்பத்தன்மை கொண்ட இடத்தில் விளையாடுவது மிகுந்த சிரமம்… ட்ரெண்ட் போல்ட்.!

Default Image

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகின்ற சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், 8 அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்களும் கடின பயிற்சி செய்து வருகிறார்கள், மேலும் வருகின்ற சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு முதல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டும் மோதவுள்ளது. மேலும் இந்த போட்டிக்காக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள். இந்த இரண்டு அணி கிரிக்கெட் வீரர்களும் கோப்பையை வெல்லும் நோக்கத்துடன், கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் மும்பை அணியின் பந்து வீச்சாளர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் ட்ரெண்ட் போல்ட் மும்பையில் அதிகமான வெப்பத் தன்மை இருப்பதை நான் சந்திக்க இருக்கும் மிகப்பெரிய சவால் என்றால் வெப்பத்தன்மை தான் என்னைப்போல் ஒரு சிறிய நாட்டில் இருந்து வந்துள்ள வீரர்களுக்கு இது மிகவும் சிரமம் தான். மேலும் வெப்பம் இருந்தாலும் நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்