இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் இந்த அணிதான் வெற்றிபெறும்- பிரெட் லீ.!

Default Image

இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தட்டி செல்லும் என்று ஆஸ்தி ரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 4 முறை இறுதி கோப்பையை வென்று ஒரு சாதனையை வைத்துள்ளது என்றே கூறலாம், அதற்கு அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை கோப்பை வென்றுள்ளது, இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை பிசிசிஐ நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் போட்டிக்காக அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள், இந்நிலையில் ஆஸ்தி ரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியது, இந்த முறை ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முழுத்தகுதி உள்ளது.

மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது, இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் சாதகமாக அமையும், நான் அடுத்த இரண்டு மற்றும் மூன்று வாரங்களில் நான் அங்கு சென்று வானிலேயே பார்த்தவரைக்கும் 40 டிகிரி வரை இருக்கும் என தெரிகிறது ,மேலும் இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுழற் பந்துவீச்சாளார்கள் ட்ரன் செய்யவார்கள் இது அவர்களுக்கு கண்டிப்பாக உறுதியாக வெற்றியை கொடுக்கும் என நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk