ஆழமான மற்றும் தெளிவான சிந்தனை கொண்டவர் ரோஹித் சர்மா- ஜாகிர் கான்.!

Default Image

ரோஹித் சர்மா ஒரு வீரர்களிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை எப்படி வெளிக்கொண்டு வர முடியும் என்பதே எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பவர் என்றும் ஜாகிர் கான் கூறியுள்ளார.

இந்த வருடம் ஐபிஎல் போட்டி வருகிற செப்டம்பர் மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வெற்றிகரமாக 4 முறை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் கோப்பை வெற்றி பெற்று சாதனை வைத்துள்ளது.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி 5வதாக வெற்றி கோப்பையை பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவை பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஜாகிர் கான் சமீபத்தில் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்யும் பொழுது ரோஹித் சர்மா பற்றி சில சிறப்பான கருத்துக்களை கூறியுள்ளார்.

அதில் ஜாகிர் கான் கூறியது ரோகித் சர்மாவின் சிறப்புகளை பற்றி கூறினால் மிகவும் அதிகமாக கூறலாம், குறிப்பாக நான் ஒரு சிலவற்றை மட்டும் கூறுகிறேன், ரோஹித் சர்மா தன்னை சுற்றி நிதானமான சூழல் நிலையை உருவாக்குபவர், தன்னை சுற்றியுள்ளவர்கள் பதட்டம் அடையுமாறு எந்த ஒரு காரியத்தையும் செய்ய
மாட்டார்.

மேலும் ரோகித் சர்மா ஆழமான மற்றும் தெளிவான சிந்தனைகளை கொண்டவர், போட்டியில் நெருக்கமான சூழ்நிலைகள் ஏற்படும் பொழுது மிகவும் சரியான முடிவுகளை எடுப்பார், அனைத்து வீரர்களுக்கும் நம்பிக்கை கொடுப்பார், மேலும் ரோஹித் சர்மா ஒரு வீரர்களிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை எப்படி வெளிக்கொண்டு வர முடியும் என்பதே எப்போதும் யோசித்துக்கொண்டே இருப்பவர் என்றும் ஜாகிர் கான் கூறியுள்ளார.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்