பந்து வீச்சில் மிரட்டிய பஞ்சாப்.., 135 ரன் இலக்கு நிர்ணயித்த சென்னை ..!

Default Image

சென்னை அணி 20 ஓவர் முடிவில் 134 ரன் எடுத்து 6 விக்கெட்டை இழந்தது.

இன்றைய ஐபிஎல் 2021 இன் 53 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு ப்ளெஸிஸ் இருவரும் களமிறங்கினர்.

வந்த வேகத்தில் ருதுராஜ் 12 ரன் எடுத்து ருதுராஜ் வெளியேறி ரசிகர்களுக்கு  அதிர்ச்சியை கொடுத்தார். பின்னர், களம் கண்ட மொயீன் அலி டக் அவுட் ஆக ராபின் உத்தப்பா 2 , அம்பதி ராயுடு 4 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து இறங்கிய கேப்டன் தோனி சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனி 2 பவுண்டரி அடித்து 12 ரன்னில் பிஷ்னோயிடம் போல்ட் ஆனார்.

பின்னர், ஜடேஜா, ஃபாஃப் டு ப்ளெஸிஸ் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து நிதானமாக விளையாடிய ஃபாஃப் டு ப்ளெஸிஸ் அரைசதம் விளாசி 76 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் கே.எல் ராகுலிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழக்க, இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 134 ரன் எடுத்து 6 விக்கெட்டை இழந்தது. பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங், கிறிஸ் ஜோர்டான் தலா 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் , ஷமி தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்