#INDvsSA இந்திய அணி 2ஆவது டி-20போட்டியில் வெற்றி பெற்று தொடரையும் வென்றது!!

Default Image

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டி-20போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் வென்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணியானது 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டியில் வென்று இந்தியா ஏற்கனவே தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கும் நிலையில் இரண்டாவது போட்டி நேற்று கவுகாத்தியில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசத் தயாரானது.

இதன் படி முதலில் பேட் செய்த இந்திய அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 57 ரன்களும், ரோஹித் சர்மா 43 ரன்களும், விராட் கோலி 49* ரன்களும், சூரியகுமார் 61 ரன்களும் அடித்தனர்.

238 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவிற்கு கேப்டன் பவுமா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். 5 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு மார்க்ரம் மற்றும் டி காக் இணைந்து ஓரளவு போராடினர். மார்க்ரம் 33 ரன்களில் அவுட் ஆன பின்பு மில்லர் – டி காக் ஜோடி சேர்ந்து அணியின் வெற்றிக்காக போராடினர், டி காக் 69 ரன்களும், மில்லர் 106 (47 பந்துகளில்) ரன்களும் எடுத்தனர்.  இறுதியில் 20 ஓவர் முடிவில் அந்த அணியால் 221 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற  இந்தியா தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்று முன்னிலையில் உள்ளது. கே.எல்.ராகுல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்