நாளை தொடங்குகிறது 2 ஆம் டெஸ்ட் போட்டி.. வெற்றிநடைபோடுமா கோலி தலைமையிலான இந்திய அணி?

Default Image

ind vs eng : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேபாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொடுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட், ஒருநாள், டி-20 தொடர்களை விளையாடி வருகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி, சென்னையில் கடந்த 5 ஆம் தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இதனால் இந்திய அணி, 3-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அதுமட்டுமின்றி, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக நான்காவது முறையாக டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் விராட் கோலி, கடும் நெருக்கடியில் உள்ளார். மேலும் ரசிகர்கள், கோலி மீது அதிருப்தி தெரிவித்து, சமூகவலைத்தளங்களில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ind vs eng

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேபாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ள நிலையில், தற்பொழுது வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் தீவிரமாக பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது. இரண்டாம் டெஸ்ட் போட்டியை காண 15,000 ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுவிட்டது.

கோலிக்கு பதில் ரஹானேவை கேப்டனாக தேர்வு செய்யுங்கள்! இல்லையெனில்…” ரசிகர்கள் கோரிக்கை!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்