அந்த வரிசையில் அவர் நல்லா தான் விளையாடி வருகிறார் .. அதனால் – பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர்

Default Image

விக்ரம் ரத்தோர்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியிலும், இதற்கு முன் வங்கதேச அணியுடனான பயிற்சி போட்டியிலும் சரி இந்திய அணியின் பேட்டிங்கில் 3-வதாக ரிஷப் பண்ட் களமிறங்கி அசத்தி வருகிறார்.

அயர்லாந்து அணியுடனான போட்டியில் விராட் கோலி 1 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறிய போது ரிஷப் பண்ட் களமிறங்கி 26 பந்துக்கு 36 ரன்கள் எடுத்து அசத்தினார். அதே போல தான் பயிற்சி போட்டியிலும் ஒரு அரை சதம் அடித்து கலக்கினார். இதற்கு முன் இந்திய அணியில் அவர் 4-வது அல்லது 5வது தான் களமிறங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அன்று அயர்லாந்து அணியுடனான போட்டி முடிவடைந்த பிறகு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான விக்ரம் ரத்தோர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இதனை குறித்து அவர் பேசும் போது, “ரிஷப் பண்ட் தான் எங்கள் அணியின் தற்போதைய 3-வது பேட்டிங் வரிசை வீரர் அதில் மாற்றம் எதுவும் இல்லை. மேலும், அவரும் அந்த இடத்தில் நன்றாக பேட்டிங் செய்கிறார்.

அவர் 3-வதாக களமிறங்கும் போது பேட்டிங் டாப் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் ஒரு கூடுதல் பலனாக அமையும். அது மட்டுமின்றி ஒரு ஆல்-ரவுண்டருக்கும் அணிக்குள் இடம் கிடைக்கிறது. இதனால் தான் ரிஷப் பண்ட் 3-வது களமிறங்குகிறார்”, என்று அவர் பேசி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்