ராஜஸ்தானுக்கு 194 ரன்கள் இலக்கு வைத்த ஹிட்மேன் படை..!

Default Image

இன்று நடைபெறும் 20-வது ஐபிஎல் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் அணியும் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேய்க் சையத் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மும்பை பேட்டிங்கை தேர்வு செய்தது.

மும்பை அணியில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக்,
ரோஹித் சர்மா  இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடிய குயின்டன் டி காக் 23 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர், சிறிது நேரத்திலே ரோஹித் 35 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதைத்தொடர்ந்து, இறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி79 * ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் நின்றார். பின்னர், இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்தனர்.

194 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்