அவர் தலைமையில் விளையாட நான் ரெடி,காத்திருக்கு விருந்து – சாம் கரண்

Default Image
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரணை 5.5 கோடிக்கு வாங்கியது.
  • சென்னை ரசிகர்களுக்கு விருந்து படைப்பேன் சாம் கரண் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

2020-ஆம்  ஆண்டு  13-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் தற்போது  நடைபெற்றது. மொத்தம் 8 அணிகளில் 73 வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது.இந்த ஏலத்தில் இங்கிலாந்து அணி வீரர் சாம் கரணை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.5.50 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இந்நிலையில் இது குறித்து சாம் கரண் கூறுகையில், சென்னை ரசிகர்கள் முன்பு ஆடுவது என்பது எப்பொழுதுமே சந்தோஷமான விஷயம், ஐபிஎல் கோப்பையை மீண்டும் கொண்டு வருவோம்.சென்னைக்கு வந்து எனது புதிய அணி வீரர்களை சந்திக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். அனுபவம் வாய்ந்த வீரரான தோனியின் தலைமையில் விளையாடவும் ஆர்வமாக உள்ளேன்.சென்னை ரசிகர்களுக்கு விருந்து படைப்பேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்