ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு கிறிஸ் மோரிஸ் ஏலம்.! எவ்வளவு தெரியுமா?

Default Image

ஐபிஎல் வரலாற்றிலேயே கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

2021-ஆம் ஆண்டிற்கான 14வது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள், வீர்ரகளை தேர்தெடுப்பதற்கான ஏலம் இன்று சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 164 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 292 வீர்ரகளை ஒவ்வொருவராக ஏலம் விடப்பட்டு வருகின்றன.

அப்போது, தென் ஆப்ரிக்கா வீரரான கிறிஸ் மோரிஸ் ரூ.75 லட்சத்தித்தில் அடிப்படை விலையில் ஏலம் விடப்பட்டது. இவரை அணியில் எடுக்க பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், இறுதியாக கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு கிறிஸ் மோரிஸை ஏலம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ.10 கோடிக்கு கிறிஸ் மோரிஸை வாங்கிருந்தது பெங்களூர் அணி என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்