டாஸ் முடிஞ்சதுன்னு நினைச்சேன் போட்டியே முடிஞ்சது -கே.எல்.ராகுல் பேச்சு!

kl rahul about ind vs sa

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தனர்.

இந்த இரண்டாவது போட்டி மிகவும் குறைவான நேரத்திலே நடந்து முடிந்தது. குறிப்பாக சொல்ல போனால் குறைந்த ஓவர்கள் வீசப்பட்டு முடிந்த  டெஸ்ட் போட்டி என்றால் அது இதுவாக தான் இருக்கும் என்று கூட கூறலாம். இந்நிலையில், இந்த போட்டி முடிந்த பிறகு பேசிய கே.எல்.ராகுல் “போட்டியில் விளையாடும் போது டாஸ் போடப்பட்டதற்குள் போட்டியே முடிந்துவிட்டது போல இருக்கிறது என” கூறியுள்ளார்.

IndVsSA: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இது குறித்து பேசிய கே.எல்.ராகுல் “கேப்டவுனில் நாங்கள் முதல்முறையாக வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியான விஷயம்.  போட்டியில் வெற்றிபெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் இங்கு பலமுறை விளையாடி இருக்கிறோம். ஒவ்வொரு முறையிலும் பேட்டிங் சரியில்லாத காரணத்தால் சில போட்டிகளில் தோல்வி அடைந்து இருக்கிறோம்.

கேப்டவுனை யாராலும் புரிந்துகொள்ளவே முடியாது. உணர்ச்சிகளின் அடிப்படையில், நேர்மையாக, யாராலும் புரிந்து கொள்ள முடியாது. டாஸ் இப்போதுதான் நடந்தது அதற்குள் போட்டியே முடிந்துவிட்டது போல தெரிகிறது.  ஆனால், இந்த முறை வெற்றிபெற்றுள்ளது நாங்கள் மகிழ்ச்சியாக பார்க்கிறோம்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நம் நாட்டிற்காக விளையாடுவதை நாங்கள் ரொம்பவே  எவ்வளவு மதிக்கிறோம். எனவே, இந்தியாவை விட்டு வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளின் வெற்றிகள் எங்களுக்கு ரொம்பவே முக்கியம் அதனை நினைத்து தான் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடி வருகிறோம்” எனவும் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live ilayaraja
good bad ugly - gv prakash
India vs New Zealand Final
tvk poster
TVKVijay - TN govt
MKStalin - PINK AUTO
Tvk executives arrested