குஜராத்தை பாஜகவின் கோட்டையாக மாற்றுவார்கள் – அமித் ஷா

Voters will establish Gujarat as BJP's stronghold, says Amit Shah on local body polls

குஜராத் மக்கள் அதிக எண்ணிக்கையில்  வாக்களிப்பார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதாவது இன்று முதற்கட்ட தேர்தலும் ,பிப்ரவரி 28-ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ,காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மொத்தம் 575 இடங்களுக்கும் 2,276 வேட்பாளர்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதனிடையே இன்று  அகமதாபாத்தில் உள்ள நாரன்புரா துணை மண்டல அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.இதன் பின்னர் அவர் பேசுகையில் ,”இன்று குஜராத் மக்கள் அதிக எண்ணிக்கையில்  வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். குஜராத்தை பாஜகவின் கோட்டையாக மாற்றுவார்கள் ” என்று தெரிவித்துள்ளார்.

குஜராத்தை பாஜகவின் கோட்டையாக மாற்றுவார்கள் – அமித் ஷா