2021 – 2022-ம் ஆண்டு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தைக் கூட வாங்கித் தர இயலாத கையாலாகாத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து ஈபிஎஸ் அறிக்கை.
2021 – 2022-ம் ஆண்டு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தைக் கூட வாங்கித் தர இயலாத கையாலாகாத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று செயல்படும் இந்த விடியா அரசு, விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிவாரணம் பெற்றுத் தருவதில் தங்களுக்கு எந்த விதமான கமிஷனும் கிடைக்காது என்பதால், மெத்தனமாக பணியாற்றுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என தெரிவித்துள்ளார்.
unknown node