மேற்கு வங்கத்தில் 'வெடிகுண்டு தாக்குதலில்' இரு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பலி

மேற்கு வங்கத்தில் நடக்க இருக்கும் பஞ்சாயத்து தேர்தலுக்கு முன்னதாக பிர்பூம் மாவட்டத்தில் சனிக்கிழமை வெடிகுண்டு வீசித் தாக்கப்பட்டதில்  திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்கத்தில் நடக்க இருக்கும் பஞ்சாயத்து தேர்தலுக்கு முன்னதாக பிர்பூம் மாவட்டத்தில் சனிக்கிழமை வெடிகுண்டு வீசித் தாக்கப்பட்டதில்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  இரண்டு  பேர்  கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இறந்தவர்களில் ஒருவர்  திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவரின் சகோதரர் லால்து ஷேக்  என்றும் மற்றொருவர் மற்றும் அவரது நண்பர் நியூட்டன் ஷேக் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் ஆதரவாளர்களே காரணம் என நியூட்டனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தாக்குதல் நடத்தியவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறினார்.

இச்சம்பவம் பற்றி எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுகையில் இந்த சம்பவம் ஆளும் டிஎம்சியின் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் வீழ்ச்சியாகத் தெரிகிறது, அதை கட்சி மறுத்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.