விடுதி காப்பாளர்களுக்கு 3 நாட்கள் புத்தாக்கப் பயிற்சி – அரசாணை வெளியீடு!

TN Govt issues administrative approval to provide three days of refresher training to caretakers working in Minority Welfare Homes

சிறுபான்மையினர் நல விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள், காப்பாளினிகளுக்கு மூன்று நாட்கள் புத்தாக்க பயிற்சி வழங்க நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள்/ காப்பாளினிகளுக்கு 3 நாட்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்க நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக,அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:”2021-2022 ஆம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர் ,மிகப்பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் மானியக் கோரிக்கையின்போது மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

“விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்/காப்பாளினிகள் தங்கள் விடுதியை சிறந்த முறையில் பராமரிப்பு செய்திடவும், விடுதியை திறம்பட நடத்திடவும் பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்/ காப்பாளினிகளுக்கு புத்தாக்க பயிற்சி 83 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

அதன்படி,பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப் பட்டோர் (மற்றும்) சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளில் பணியாற்றி வரும் 965 காப்பாளர்/ காப்பாளினிகளுக்கு சென்னை,கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அண்ணா நிர்வாக பணியான கல்லூரியில் பயிற்சி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது”,என தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node