கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் மொபைல் எண் முடக்கப்படும்- அரசு அறிவிப்பு...!

The number of mobile phones of Corona vaccine in Pakistan is disabled in Punjab province

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் மொபைல்போன் எண்கள் முடக்கப்படும் என அம்மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது நாடு முழுவதும் பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும்,கொரோனா பரவாமல் தடுக்க தடுப்பூசிதான் ஒரே வழி என மருத்துவ நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.எனினும்,சிலர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள தயங்குகின்றனர்.

அந்த வகையில்,பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில்,கடந்த பிப்ரவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வரும்நிலையில்,கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்ட சுமார் 3 லட்சம் பேர் இரண்டாம் டோஸை போட்டுக்கொள்ள வரவில்லை என தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில்,பஞ்சாப் மாகாண சுகாதாரத்துறையானது,தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வராதவர்களின் மொபைல் எண்கள் முடக்கப்படும் என அதிரடியான முடிவை அறிவித்துள்ளது.