மத்திய அரசு தமிழகத்திற்கு போதுமான நிதி வழங்கவில்லை.
கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் அவர்கள் நான் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணக்கமாக இருக்க காரணம் தமிழ்நாட்டிற்கு நல்லது கிடைக்கும் என்பதால் தான் என்று கூறுகிறார்.
ஆனால், தமிழகத்தில் கஜா புயல், தானே புயல், வர்தா புயல் போன்ற புயல்கள் வந்தபோது மத்திய அரசு தமிழகத்திற்கு போதுமான நிதி வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.