மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்கள் ஆடைகளின்றி ஒரு கும்பலால் இழுத்து செல்லப்பட்ட விவகாரம் நாடெங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆளும்கட்சி உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மணிப்பூரில் இந்த கூட சம்பவத்தை ஏற்படுத்தியவர்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறி காங்கிரஸ் மகளிர் அணியினர் இன்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று டெல்லி நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டதொடர் துவங்கி உள்ளதால், போராட்டம் நடக்கும் இடத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் குவிக்கப்பட்டுளள்ளனர்.
