தமிழக அரசு இதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் – ஜி.கே.வாசன்

பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் அறிவுறுத்தல்.

பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் அறிவுறுத்தல்.

தமிழ்நாட்டில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைவதாக தமிழக வேளாண் துறை அறிவித்துள்ளது.

இதனையடுத்து, ஜி.கே.வாசன் அவர்கள் பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழக அரசு, விவசாயிகள் பயிர்காப்பீடுசெய்வதற்கான தேதி முடிவடையும் வேளையில் அதற்கான காலக்கெடுவை நீட்டித்து விவசாயிகள் பயன்பெற வழி வகுக்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown nodeunknown node