சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பி சாந்தனு வெளியேற மறுப்பு – அவை ஒத்திவைப்பு!

Suspended Trinamool Congress MP Chandanu Sen refuses to leave the state assembly.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென் மாநிலங்களவையில் இருந்து வெளியேற மறுப்பு.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உளவு பார்க்கும் விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும் போது, அதனை பறித்து கிழித்து எறிந்த விவகாரம் தொடர்பாக எம்பி சாந்தனு சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மேலும், நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் மாநிலங்களவை நடவடிக்கையில் எம்பி சாந்தனு சென் பங்கேற்கக்கூடாது என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென் மாநிலங்களவையில் இருந்து வெளியேற மறுப்பு தெரிவித்ததால் மாநிலங்களவை மதியம் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பி சாந்தனு வெளியேற மறுப்பு – அவை ஒத்திவைப்பு!