எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த சீமான்..!

நாம் தமிழர் கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் கொலை வெறி தாக்குதல் நடத்திய திமுக-வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டதற்கு நன்றி

நாம் தமிழர் கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் கொலை வெறி தாக்குதல் நடத்திய திமுக-வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்த சீமான்.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைகோரிய ஆர்ப்பாட்டத்தில், அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய திமுகவினரை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைகோரிய ஆர்ப்பாட்டத்தில், அத்துமீறி நுழைந்து கொலைவெறித்தாக்குதல் நடத்திய திமுக குண்டர்கள் மீதும், வேடிக்கைப் பார்த்த காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும்,அதிகாரத்திமிரில் சனநாயக மரபுகளைக் குழிதோண்டிப் புதைத்து ஆணவத்தோடு செயல்படும் திமுகவினரின் அட்டூழியத்தைக் கண்டித்துமென அறிக்கை வெளியிட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான ஐயா எடப்பாடி பழனிச்சாமிஅவர்களுக்கு எனது அன்புகலந்த நன்றியும், வணக்கமும்!’ என பதிவிட்டுள்ளார்.

unknown node
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த சீமான்..!