சென்னை : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக திமுக குறித்து விமர்சனம் செய்வதும் அதற்கு அக்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பதிலடி கொடுத்ததும் பேசி வருகிறார்கள். அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி சமீபகாலமாக தமிழகத்தில் நடக்கும் பாலியல் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து திமுக ஆட்சி சரியில்லை என்கிற வகையில் பேசியிருந்தார். இதனையடுத்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் வலைதள பாலியல் புகார்க்கு காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கிறது எனவும் பழனிசாமி பாஜகவுக்கு தனது ராஜ விசுவாசத்தைக் காட்டுகிறார் […]
கோவை : முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக பற்றியும் , எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைவது பற்றிய கருத்துக்களுக்கும் பதில் அளித்து பேசியிருந்தார். அப்போது மத்திய அமைச்சர் அமித்ஷா உடனான முந்தைய சந்திப்பு பற்றியும் அவர்கள் கூறியது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், ” அன்றைக்கு இருந்த அரசியல் சூழலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) நானும், எடப்பாடி பழனிசாமியும் அங்கம் வகித்தோம். அப்போது கூட்டணி […]
சென்னை : தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால், மாநிலத்திற்கு கல்வி நிதி வழங்க முடியாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் சட்ட விதிகள் தடையாக உள்ளன என்றும், தமிழ்நாடு அரசின் அரசியல் காரணங்களால் தான் இந்த கொள்கையை எதிர்க்கிறது எனவும் பேசியிருந்தார். […]
சென்னை : மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால், மாநிலத்திற்கு கல்வி நிதி வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், அவர் இதனை தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் சட்ட விதிகள் தடையாக உள்ளன என்றும், தமிழ்நாடு அரசின் அரசியல் காரணங்களால் தான் இந்த கொள்கையை எதிர்க்கிறது என்றும் அவர் விமர்சித்தார். மும்மொழிக் கொள்கை […]
தேனி : அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது இந்த தகவலை மேலும் வலுப்படுத்தியது. இதனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை என பல்வேறு யூகங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவில் பிரிந்திருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் […]
சென்னை : அதிமுகவிற்குள் தற்போது என்ன நடக்கிறது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறதா என்ற பேச்சுக்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றனர். செங்கோட்டையன் ஆப்சென்ட் : அதற்கு தீனி போடும் வகையில் அடுத்தடுத்த ‘திடீர்’ நகர்வுகள் அதிமுகவில் அரங்கேறி வருகின்றன. கடந்த ஞாயிற்று கிழமை கோவை அன்னூரில் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாய கூட்டமைப்புகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி […]
சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயுத்தமாகி வருகின்றனர். இந்த முறை நடிகர் விஜய்யின் தவெகவும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் போட்டிகள் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அதிமுக தெரிவித்துள்ளது. இத்தகவலை அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் S.P.வேலுமணி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். வரும் 31ம் தேதி கோவையில் சுற்றுப்பயணத்தை தொடங்க […]
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தொடர் நிகழ்வுகள் பற்றியும், 4 ஆண்டுகால திமுக அரசு பற்றியும் பல்வேறு விமர்சனங்களையும் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்து பேசினார் . இபிஎஸ் பேட்டி : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த […]
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒரு மாணவியை 2 பேர் நேற்று இரவு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார், ஒருவரை கைது செய்துள்ளனர். மற்றொரு நபரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு பெண்ணை 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் கரையை கடந்ததன் காரணமாக விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி மக்கள் வசிக்கும் பகுதிகள் சாலையோரங்களில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அம்மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்து வருகிறார். இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த பிறகு […]
ஓமலூர் : சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (நவ-29) அதிமுக கள ஆய்வு கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோர் பங்கேற்றனர். மேலும், அந்த கூட்டத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் சட்டமன்ற தேர்தல் பணி குறித்து ஆலோசனையும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ஆளுங்கட்சியாக திமுக மீது பல குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளார். […]
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சனம் செய்து பேசி இருந்தார். இ.பி.எஸ் விமர்சனம் : இது குறித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து 42 மாத காலம் ஆகி விட்டது. ஆனாலும், விவசாயிகளுக்கு எந்த நல்ல திட்டத்தையும் செய்யவில்லை. நேற்று பெய்த […]
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைக்குமா என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த இபிஎஸ், “ஒன்றை நல்லா புரிஞ்சுக்கணும். அரசியல் சூழலை பொறுத்துதான் கூட்டணி அமைக்கப்படும். தேர்தல் நெருங்கும் போதுதான் அது முடிவு செய்யப்படும்” என்றார். இது பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்பதை மறைமுகமாக சொல்வதாக உள்ளது. எந்த சந்தர்ப்பத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது […]
சென்னை : இன்று (நவம்பர் 4) சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் பகுதியில் மதுராந்தகம் பால்பண்ணை காவல்நிலைய எஸ்ஐ ஜெயஸ்ரீ மற்றும் காவலர் நித்யா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் பயணித்தனர். அப்போது பின்னல் வந்த கார் மோதியதில் எஸ்.ஐ ஜெயஸ்ரீ சம்பவ இடத்தியிலே உயிரிழந்தார். படுகாயமடைந்த காவலர் நித்யாவை அங்கிருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால்,அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் பகுதி போலீசார் வழக்குப்பதிவு […]
சென்னை : நாளை அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளி திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் […]
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட வேண்டும் என்றும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் நடத்திய மாநாடு குறித்தும், அம்மாநாட்டில் விஜய் பேசிய கருத்துக்கள் பற்றியும் […]
சேலம் : திமுக கூட்டணி உடைந்து விடும், திமுக செல்வாக்கு சரிந்துள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி பகல் கனவு காண்கிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னர் விமர்சனம் செய்திருந்தார். இந்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று சேலத்தில் நடைபெற்ற காட்சிக்கூட்டத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அவர் கூறுகையில், ” ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து மாநிலத்தின் முதலமைச்சராக முடியும் என்றால் அது அதிமுகவில் மட்டுமே சாத்தியம். அதற்கு உதாரணம் நான். அதேபோல திமுகவில் […]
சென்னை : இன்று (அக்டோபர் 17) அதிமுக கட்சியின் 53வது ஆண்டுவிழாவானது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி , முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் , தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த விழா முடிந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவரிடம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோரை சேர்க்கும் விவகாரம் […]
சென்னை : விஜயதசமியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பேரணி நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் 6ஆம் தேதி ஞாயிற்று கிழமையன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ஈசாத்தி மங்கலம் பகுதியில் இருந்து பூதப்பாண்டி வரை ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. இந்த ஆர்எஸ்எஸ் பேரணியை கன்னியகுமாரி தொகுதி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனி […]
சென்னை : அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த மாற்றுத்திறனாளி ஆசிரியரை மகா விஷ்ணு இழிவு படுத்தி பேசியதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கோவில்பட்டியில் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். மேலும், ” ஆண்டவனால் தன நீங்கள் மாற்றுத்திறனாளியாக படைக்கப்பட்டுள்ளீர்கள் என்று அந்த ஆசிரியரை நோக்கி கடுமையான சொல்லை மகா விஷ்ணு பயன்படுத்தி உள்ளதும் கண்டிக்கத்தக்கது. மாற்றுத்திறனாளிகளிடம் மனிதநேயதுடன் நடந்துகொள்ள […]