சென்னை : அதிமுக – பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். இதே தோல்விக் கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், நேற்றைய தினம் பாஜக தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு’ என்று அமித்ஷா பேசியிருந்தார். இதற்கு’ இது மணிப்பூர் அல்ல, தமிழ்நாடு என்பதை அவருக்கு நினைவூட்டுகிறேன்’ ஒன்றரை ஆண்டுகளாக […]
சென்னை : அதிமுக – பாஜக கூட்டணியே ஊழல் தான் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிகார வெறியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி மாநில உரிமைக்கு எதிரானது. 2 ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அடமானம் வைத்தவர்கள், தமிழகத்தையும் அடகு வைக்க துடிக்கிறார்கள் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். இதே தோல்விக் கூட்டணியை […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதில், எம்எல்ஏக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில், டாஸ்மாக் ஊழல் புகாரில் சிக்கிய ‘தியாகி யார்’ என்ற பேட்ஜை அதிமுகவினர் அணிந்து வந்தனர். இதுகுறித்து பேரவையில் முதல்வர் ஸ்டாலின், “நொந்து நூடுல்ஸாகிப்போன அதிமுக தொண்டர்கள்தான் தியாகி… முதல்வர் பதவிக்காக காலில் விழுந்ததும் ஏமாந்தாரே அந்த அம்மையார்தான் தியாகி” என்று பதிலடி கொடுத்தார். […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதில், எம்எல்ஏக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு வருகையில், அதிமுக எம்எல்ஏக்கள் “யார் அந்த சார்?’ எனும் வாசகம் அடங்கிய பேட்ஜ் அணிந்து வந்தனர். மேலும், சபாநாயகரிடம் முன் அனுமதி பெறாமல் இது தொடர்பான பதாகைகளையும் பேரவைக்குள் கொண்டு வந்ததாக தெரிகிறது. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றது குறித்து […]
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில், தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஏற்கனவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையேயான பனிப்போர் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும் சூழலில், தற்போது அது மேலும் தீவிரமடைந்து வருகிறது. செங்கோட்டையன் தொடர்ந்து கட்சி கூட்டங்களை புறக்கணித்து வருவதும், தன்னிச்சையாக இத்தகைய பயணங்களை மேற்கொள்வதும் அதிமுகவில் உட்கட்சி பூசலை மேலும் தீவிரமாக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் […]
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. யார் யார் எந்தெந்த கட்சி கூட்டணி என்ற பேச்சுக்கள் ஒரு புறம் இருக்க, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை என்பது நாளுக்கு நாள் பொதுவெளியில் வெளிப்பட்டு வருகிறது. ஏற்கனவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையேயான பனிப்போர் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும் சூழலில், தற்போது அது […]
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக உள்ள நிலையில், அதில் இன்னும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், இன்று தூத்துக்குடி மட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். அப்போது பேசிய அவர் ” பிரிந்தது பிரிந்தது தான் இணைவதற்கெல்லாம் சாத்தியமே கிடையாது. ஏனென்றால், பிரிந்தது மட்டுமில்லை இந்த கட்சி எதிரிகளிடம் அடைமானம் வைப்பதை என்னால் பார்க்க முடியாது. அதிமுக அலுவலகத்தில் ரவுடிகள் மூலம் ஓபிஎஸ் தலைமையில் ரவுடிகளை […]
தூத்துக்குடி : எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, கடந்த சில ஆண்டுகளாக ஓ.பி.எஸ் தரப்புடன் ஏற்பட்ட மோதல்களால் தனியாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பி.எஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அவரது ஆதரவாளர்களும் தனியாக இயங்கி வருகின்றனர். எனவே, உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) உடன் மீண்டும் இணைவது சாத்தியமே […]
சென்னை : டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேரில் சந்தித்தார். கூட்டணியில் இருந்து பிரிந்த அதிமுக பாஜக வரும் தேர்தலில் மீண்டும் கூட்டணியமைக்கும் என்று பேசப்படும் நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. டெல்லியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட செல்வதாக கூறிவிட்டு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணியா என்பது குறித்து இன்று காலை டெல்லி விமான […]
டெல்லி : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த அதிமுக தலைவர்கள் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளனர். முதலில் டெல்லியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட செல்வதாக கூறிவிட்டு சென்ற எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவை சந்தித்தது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இந்த சந்திப்பை அடுத்து அமித்ஷா தனது சமூக வலைதள பக்கத்தில் , 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக […]
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் சூழலில் அவரது இந்த திடீர் பயணம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே உள்ள நிலையில், இந்த பயணம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதையடுத்து, அவர் இன்று இரவு அமித்ஷாவை இபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் டெல்லி பயணம் குறித்து […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் தங்கள் தொகுதி குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு துறை ரீதியிலான அமைச்சர்கள் பதில் அளித்தும் வருகின்றனர். இந்த கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் இதே வேளையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் அதிமுக சார்பாக கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை […]
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று நோன்பு திறந்து வைத்தார். அதன்பிறகு நிகழ்ச்சியில் பேசிய அவர் ” என்னை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை ” என பேசினார். இது குறித்து பேசிய அவர் ” பதவிக்காகவோ புகழ்ச்சிக்காகவோ அரசியலுக்கு வந்தவன் அல்ல நான். மக்களுக்காக தொண்டாற்ற அரசியலுக்கு வந்தவன். எனக்கென்று தனியாக கருதும், நிலைப்பாடும் இல்லை. ஜாதி […]
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, பட்ஜெட்டுக்கு முன்னதாக ₹ குறியீட்டிற்கு பதிலாக தமிழ் எழுத்தான ரூ என்பதை ரூபாயின் அடையாள இலச்சினையை தமிழக அரசு மாற்றியது. இதனை குறிப்பிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு கிடைத்த வரவேற்பு பற்றியும் ‘உங்களில் ஒருவன்’ என்கிற காணொளியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிருக்கிறார். இதனை எதிர்க்கட்சி […]
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டன. இப்படி இருக்கின்ற சூழ்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (மார்ச் 15) சபாநாயகர் அப்பாவுவை தனியாக சென்று நேரில் சந்தித்தது பேசும் பொருளானது. இதுகுறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இ.பி.எஸ். கருத்து குறித்த கேள்விக்கு சபாநாயகர் உடனான சந்திப்பு குறித்து விளக்கமளித்த செங்கோட்டையன், “சபாநாயகரை எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். […]
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த மாதம் 12ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோதே தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டு என உடன்படிக்கை’ கையெழுத்தானதாக கூறியிருந்தார். தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக சொல்லவில்லை என குறிப்பிட்டு இபிஎஸ் பேசியிருந்தார். அதனை இப்பொது இபிஎஸ் மறுத்துள்ளது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று செய்தியாளர் சந்திப்பில் கடந்த மக்களவைத் தேர்தல் […]
தேனி : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தேனியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பங்கேற்றார். இந்நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் அவரை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. யார் துரோகி, ஜெயலலிதாவுக்கு எதிராக வேலை செய்தவர், அதிமுக ஆட்சியை அகற்றக்கோரி வாக்களித்தவர், அதிமுக தலைமை செயலகத்தை சூறையாடியவர் என கடுமையாக சாடினார். இபிஎஸ் பேசுகையில், ” ‘எடப்பாடி ஒரு மூழ்கும் கப்பல். அதில் யாரும் ஏறமாட்டார்கள். நன்றி மறந்த துரோகிகளை விரட்டினால் தான் […]
சென்னை : அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி – ஓ.பன்னீர்செல்வம் என இரண்டாக பிரிந்த அதிமுகவில், தற்போது ஓபிஎஸ் முழுதாக ஓரங்கபட்டப்பட்டு அதிமுக பொதுச்செயலாளராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் எடப்பாடி பழனிச்சாமி தான் தொடர்ந்து வருகிறார். இருந்தும் இபிஎஸ் – ஓபிஎஸ் பிரச்சனை அவ்வப்போது எழுந்து வந்துகொண்டுதான் இருக்கிறது . இபிஎஸ் – செங்கோட்டையன் : இதற்கிடையில் தற்போது புது உட்கட்சி பிரச்சனையாக […]
சென்னை : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக திமுக குறித்து விமர்சனம் செய்வதும் அதற்கு அக்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பதிலடி கொடுத்ததும் பேசி வருகிறார்கள். அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி சமீபகாலமாக தமிழகத்தில் நடக்கும் பாலியல் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து திமுக ஆட்சி சரியில்லை என்கிற வகையில் பேசியிருந்தார். இதனையடுத்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் வலைதள பாலியல் புகார்க்கு காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கிறது எனவும் பழனிசாமி பாஜகவுக்கு தனது ராஜ விசுவாசத்தைக் காட்டுகிறார் […]
கோவை : முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக பற்றியும் , எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைவது பற்றிய கருத்துக்களுக்கும் பதில் அளித்து பேசியிருந்தார். அப்போது மத்திய அமைச்சர் அமித்ஷா உடனான முந்தைய சந்திப்பு பற்றியும் அவர்கள் கூறியது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், ” அன்றைக்கு இருந்த அரசியல் சூழலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) நானும், எடப்பாடி பழனிசாமியும் அங்கம் வகித்தோம். அப்போது கூட்டணி […]