அடுத்த பொங்கலுக்கு ரூ.5000 வழங்கப்படும் – எம்.எல்.ஏ தூசி மோகன்..!

If the AIADMK wins the assembly elections, 5,000 will be given for the next Pongal, said Cheyyar MLA Dusi Mohan.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அடுத்த பொங்கலுக்கு 5,000 வழங்கப்படும் எனஎம்.எல்.ஏ தூசி மோகன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அதிமுக சார்பில்மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ தூசி மோகன் கலந்து கொண்டனர்.

அப்போது, பேசிய செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ தூசி மோகன் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெறுவார் எனவும் பொங்கல் பரிசாக ரூ.2500 இல் இருந்து ரூ.5000 வழங்குவார் என்று தெரிவித்தார்.

அடுத்த பொங்கலுக்கு ரூ.5000 வழங்கப்படும் – எம்.எல்.ஏ தூசி மோகன்..!