அரசு தனது சிறப்பு நண்பர்களின் பைகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உலக அளவில் பசியால் வாடும் மக்களைப் பற்றிய குறியீடுஅறிக்கை (Global hunger index) ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பட்டியல் வெளியாகி உள்ளது.இந்த பட்டியலில் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 88 -வது இடத்தில் உள்ளது.வங்கதேசம் 75 -வது இடத்தில் உள்ளது.ஆனால் இந்தியா இந்த இரு நாடுகளை மோசமாக உள்ளது.அதாவது 94-வது இடத்தில் இந்தியா உள்ளது.ஆப்பிரிக்க நாடான ‘சாட்’ இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் உள்ள ஏழைகள் எல்லாம் பட்டினியோடு உள்ளனர். ஏனென்றால், மத்தியில் ஆளும் அரசு தனது சிறப்பு நண்பர்களின் பைகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
unknown node