இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று காலமானார்.
மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் தனது 80 வது வயதில் இன்று காலமானார்.அவர் திங்கள்கிழமை மதியம் மங்களூரு யெனெபோயா மருத்துவமனையில் காலமானார்.
ஜூலை மாதம் மூளையில் இருந்து இரத்தக் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்த முன்னாள் அமைச்சர் பெர்னாண்டஸ், தனது வீட்டில் யோகா பயிற்சி செய்யும் போது தலையில் காயம் ஏற்பட்டு மங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இதனையடுத்து,அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
unknown nodeஅவர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நாடாளுமன்ற செயலாளராகவும் பணியாற்றினார். கர்நாடகாவின் உடுப்பி தொகுதியில் இருந்து 1980 இல் 7 வது மக்களவைக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார், அதன் பிறகு அவர் கர்நாடக தொகுதியில் இருந்து மேலும் நான்கு முறை வெற்றி பெற்றார். 1999 மக்களவைத் தேர்தலில் அவர் தோல்வியடைந்த பிறகு காங்கிரஸால் ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.