கர்நாடகாவில் விரைவில் முருகேஷ் நிராணி முதல்வராக பதவியேற்பார் – அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா!

Minister KS Eeswarappa has said that Murugesh Nirani will take over as the Chief Minister of Karnataka soon.

கர்நாடகாவில் விரைவில் முருகேஷ் நிராணி முதல்வராக பதவியேற்பார் என அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் பாஜக கட்சி தலைமையிலான முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் பாஜக கட்சிக்கு இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அமைச்சரும் மூத்த தலைவருமாகிய கே.எஸ்.ஈஸ்வரப்பா அவர்கள் முருகேஷ் நிராணி விரைவில் கர்நாடக முதல்வராக வருவார் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவருக்கு முதல்வராகும் தகுதி உள்ளது எனவும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரின் நலனுக்காக அவரால் பாடுபட முடியும் எனவும், ஆனால் முதல்வர் பசவராஜ் பொம்மையை பதவியிலிருந்து நீக்க முடியாது. வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் நிராணி முதல்வராக பதவி ஏற்பார் எனவும் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா அவர்கள் தெரிவித்துள்ளார்.