மக்களின் ஆசியுடன் வங்க தேசத்தை உயரத்திற்கு கொண்டு செல்வோம் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் 4 வங்காள சட்டமன்ற தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பெரும் வெற்றி பெற்ற நிலையில் இதற்கு வாழ்த்து தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் வெற்றி பெற்ற நான்கு வேட்பாளருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்கள் பிரச்சாரம் மற்றும் வெறுப்பு அரசியலை விட, வளர்ச்சியையும் ஒற்றுமையும் கொடுக்கக்கூடிய அரசை தான் தேர்ந்தெடுப்பார்கள். இந்த வெற்றி மக்களின் வெற்றி, மக்களின் ஆசியுடன் வங்காளத்தை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்வோம் என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
unknown node