கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி தொற்றுப் பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.