துணை முதல்வர் மீதான தகுதி நீக்க வழக்கு ஜூலை 30ம் தேதி விசாரணை!

Default Image

துணை முதல்வர் மற்றும் 11 எம் எல் ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கு வரும் 30 ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபையில் முதல்வர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடந்த 2017ம் ஆண்டு திமுக கொண்டு வந்தது. அப்போது, அதிமுக கட்சியினர் ஓபிஎஸ் – இபிஎஸ் என்று இரண்டு பிரிவாக இருந்து வந்தனர்.  சட்டசபையில் நடந்த வாக்கெடுப்பின் போது முதல்வருக்கு எதிராக வாக்களித்தனர். பின்னர் இரண்டு தரப்பினரும் ஒன்றாக இணைந்தனர். முதல்வருக்கு எதிராக வாக்களித்த இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

டெல்லி உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்தது. இந்நிலையில் மீண்டும் வரும் 30ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்