உள்துறை செயலாளர் அஜய் பல்லா பதவிக்காலம் நீட்டிப்பு..!

Union Home Secretary Ajay Kumar Bhalla tenure has been extended for another year.

மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆகஸ்ட் மாதத்தில் மத்திய உள்துறை செயலாளராக பல்லா நியமிக்கப்பட்டார். அப்போது, வரும் 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இப்பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது, மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.

1984-ஆம் ஆண்டு அஸ்ஸாம்-மேகாலயா பிரிவு இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரியான அஜய் குமார் பல்லா, மத்திய எரிசக்தித் துறை செயலராகவும், பின்னர் உள்துறை அமைச்சக சிறப்பு அதிகாரியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node