2 என்ஜின் அல்ல, 3 என்ஜினுடன் அரசு செயல்படும்... முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.!

மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக 3 என்ஜினுடன் நமது அரசு செயல்படும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

CM DCm

மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக 3 என்ஜினுடன் நமது அரசு செயல்படும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் இன்று திடீர் அரசியல் திருப்பமாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(என்சிபி) அஜித் பவார், எதிர்க்கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் சிவசேனா-பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். ஆளுநர் மாளிகையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் ஆளுநர் முன்னிலையில் இன்று அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

மேலும் அஜித் பவாருடன், 9 என்சிபி தலைவர்களும் ஆளுநர் மாளிகையில் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து பேசிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தற்போது 1 முதல்வர் மற்றும் 2 துணை முதல்வர்கள் நமது அரசுக்காக பணியாற்ற இருக்கின்றனர்.

unknown node