பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் சமீப காலமாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவருக்கு இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. அவரது மகளே தனது தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன் வந்துள்ளார்.
இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இவர் விரைந்து குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், லாலு பிரசாத் யாதவுக்கு சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில், வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து விரைந்து குணமடைய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
unknown node