"எதிர்க்கட்சியின்போது விவசாயத்திற்கு ஆதரவு;ஆட்சிக்கு வந்ததும் அதற்கு எதிராக கையெழுத்து" – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..!

"DMK Support for agriculture during the opposition; permission for hydrocarbons when they come to power" - TTV Dinakaran accusations ..!

வேளாண் மண்டல சட்டத்தில் உள்ள குறைகளைச் சரி செய்து தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயத்திற்கு ஆதரவானவர்கள் போல காட்டிக்கொண்டும்,ஆட்சிக்கு வந்ததும் விவசாயத்திற்கு எதிரான திட்டத்திற்கு கையெழுத்து போடுவதையும் தி.மு.க வாடிக்கையாக வைத்துள்ளதாக அமமுகவைச் சேர்ந்த டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“காவிரி டெல்டாவில் புதிய பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான ஏல அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயத்திற்கு ஆதரவானவர்கள் போல காட்டிக்கொண்டு வசனம் பேசுவதையும் , ஆட்சிக்கு வந்ததும் விவசாயத்திற்கு எதிரான (ஹைட்ரோ கார்பன் போன்ற) திட்டத்திற்கு கையெழுத்து போடுவதையும் தி.மு.க வாடிக்கையாக வைத்திருக்கிறது.

அந்த வரிசையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பை தி.மு.க அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இப்பிரச்னையில் கொண்டிருந்த நிலைப்பாட்டையே, முதலமைச்சராக இருக்கும் திரு.ஸ்டாலின் செயல்படுத்த வேண்டும்.

மேலும் இதுபோன்ற சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காண பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தில் உள்ள குறைகளைச் சரி செய்து சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

unknown node