இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – அரசு உத்தரவு!

Delhi government has announced that the night curfew will come into effect from today

டெல்லி:இன்று முதல் (இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை) இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,நாடு முழுவதும் இதுவரை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளதாகவும்,ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 130 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தகவல் தெரிவித்தது.

இதற்கிடையில்,அதிகரிக்கும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக அனைத்து மாநில அரசுகளுக்கும் இரவு நேர ஊரடங்கு,பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில்,டெல்லியில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனாவை கருத்தில் கொண்டு இன்று (டிசம்பர் 27) முதல் இரவு 11.00 மணி முதல் காலை 5.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே, மத்தியப் பிரதேசம்,உத்தரப்பிரதேசம்,அசாம்  மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.