சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நல குறைவால் ஆகஸ்ட் 27-ஆம் தேதி சனிக்கிழமை அன்று இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ மறைவு செய்தி அறிந்து வருத்தமுற்றேன். சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது இதயபூர்வமான இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
unknown node