இலங்கையில் வாழும் மக்களுக்கு உதவிடும் வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் ₹ 10 லட்சம் ரூபாய் நிதியுதவி.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திரு கே.எஸ்.அழகிரிஅவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்களை சந்தித்து ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, காங்கிரஸ் கட்சியின் முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர்.
அதனை தொடர்ந்து, இலங்கையில் வாழும் மக்களுக்கு உதவிடும் வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் ₹ 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்கினார்.