தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறை முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு நிலை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் இன்று தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் கொலை , கொலை முயற்சி, பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறியுள்ள்ளன. இந்த சம்பவங்கள் குறித்தும், அதற்கான நடவடிக்கைகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
