#BreakingNews : பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Chief Minister of Tamil Nadu Edappadi K. Palaniswami announces pongal cash incentive for all ration card holders.

ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி  அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

எடப்பாடியில் இருந்து சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கியுள்ளார்.அந்த வகையில் சேலத்தில் இருப்பாளி என்ற பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் பேசுகையில், ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி ,ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும்.ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும்  என்று தெரிவித்துள்ளார்.2.06 கோடி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு  பொங்கல் பரிசு வழங்கப்படும்.இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அதில், ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு,திராட்சை,வெல்லம்,முந்திரி,ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவித்துள்ளார்.இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.