CII தொழில் கூட்டமைப்பு மற்றும் எல்காட் நிறுவனம் இணைந்து ‘கனெக்ட்’ என்ற தொழில்துறை கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
CII தொழில் கூட்டமைப்பு மற்றும் எல்காட் நிறுவனம் இணைந்து ‘கனெக்ட்’ என்ற தொழில்துறை கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த கருத்தரங்கில், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சிங்கப்பூர், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கருத்தரங்கில், அரசின் மின் ஆளுமை நிறுவனம் – சென்னை கணித்துறை நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.